உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து திருட்டு

Published On 2022-05-31 15:27 IST   |   Update On 2022-05-31 15:27:00 IST
கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து திருட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்தவர் முஹம்மது ஷபீர் . கடந்த 27-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த முஹம்மது ஷபீர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மாயமாகியிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் 5  திருடு போயிருந்தன.  இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் முஹம்மது ஷபீர் புகார் செய்தார் . இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவே செய்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News