உள்ளூர் செய்திகள்
கண் சிகிச்சை முகாமை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

நெல்லையில் இலவச கண்சிகிச்சை முகாம்

Published On 2022-05-29 09:48 GMT   |   Update On 2022-05-29 09:48 GMT
பேட்டை கோடீஸ்வரன்நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நெல்லை:

பேட்டை ரூரல் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் கோடீஸ்வரன் நகர் சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.

இம்முகாமிற்கு பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் தலைமை தாங்கினார்.

நெல்லை மத்திய மாவட்ட வர்த்தக அணி தி.மு.க. அமைப்பாளர் அவதார் ஷாஜகான், துுணை அமைப்பாளர் சுரேஷ் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊராட்சி தலைவர் சின்னதுரை வரவேற்றார்.

அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.  

நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் கண் சிகிச்சை அளித்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News