உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-05-29 15:03 IST   |   Update On 2022-05-29 15:03:00 IST
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள கீழகலங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பாரத்(வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 19-ந்தேதி தனது உறவினரான பிரசாந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சேர்ந்தமரம் அருகே உள்ள சுப்பையாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். சுப்பையாபுரம் விலக்கு அருகே சென்றபோது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மோட்டார் சைக்கிள் வேகமாக அதில் ஏறி இறங்கியது. அப்போது பாரத் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரசாந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாரத்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News