உள்ளூர் செய்திகள்
சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் ேபாலீசார்.

வாகனம் மோதி ஒருவர் பலி

Published On 2022-05-28 15:08 IST   |   Update On 2022-05-28 15:08:00 IST
தஞ்சை அருகே இன்று காலை வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் புறவழிச் சாலையில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக அந்த நபர் மீது மோதி விட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். ஆனால் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
 
இதையடுத்துபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News