உள்ளூர் செய்திகள்
கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.
கடையம்:
கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி சமுதாய நலக் கூடத்தில் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி யோகா பயிற்சி கடந்த 60 நாட்காக நடைபெற்று வருகின்றது .
சிறப்பு பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் மற்றும் மண்டல தலைவர் அண்ணாமலையார், பேராசிரியர் பழனி, விஜி ஆகியோர் கலந்து கொண்டனர் .
யோகா பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயிற்சி இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.