உள்ளூர் செய்திகள்
சாவு

கூலித்தொழிலாளி சாவு

Published On 2022-05-28 08:10 GMT   |   Update On 2022-05-28 08:10 GMT
மதுரை வைகையாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மதுரை

மதுரை ஆழ்வார்புரம், வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி.  சில நாட்களாக இவரை காணவில்லை. இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் நாகராஜனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மனைவி சங்கீதா விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகர், துளசிராம் தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 42), கூலித் தொழிலாளி. நேற்று மாலை இவர் முனியாண்டி புரம் தனியார் கல்லூரி முதல் மாடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் வேலையில் ஈடுபட்டார். 

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே குமரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாம்பாள்புரம், இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி பாண்டிச்செல்வி (40). இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தத்தனேரி சுடுகாட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News