உள்ளூர் செய்திகள்
கைது

நகை-பணம் திருட்டு, 2 பேர் கைது

Published On 2022-05-28 06:08 GMT   |   Update On 2022-05-28 06:08 GMT
ராணுவவீரர் வீட்டில் நகை-பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரைசேர்ந்தவர் ராமு(வயது35).இவர் ஜம்முகாஷ்மீரில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறார். மனைவி சுந்தரலேகா(29). இவர் கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தையல் வகுப்பிற்கு சென்றுவிட்டார். 

அவர் மாலையில்  வந்து பார்த்தபோது பூட்டிய வீட்டின் கதவு  திறந்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன்நகை மற்றும் ரூ.30  ஆயிரம் ரொக்கம் கொள்ளைய
டிக்கப்பட்டது தெரியவந்தது. 

இது தொடர்பாக சுந்தரலேகா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த 
பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். 

அப்போது சுந்தரலேகா வீட்டிற்கு ராமுவின் அண்ணன் ராஜசேகர் மனைவி விஜயகுமாரி(எ)பேச்சிம்மாள், இவரது தோழி நாகதுர்கா இருவரும் வந்து சென்றது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமாரி, நாகதுர்க்காவிடம் விசாரணை நடத்திய போது இருவரும் சோ்ந்து ராமு வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நகை பணத்தை மீட்டனர்.

Tags:    

Similar News