உள்ளூர் செய்திகள்
திருமருகலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-27 09:45 GMT   |   Update On 2022-05-27 09:45 GMT
திருமருகலில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

திருமருகல் சந்தைபே ட்டைகடை த்தெருவில் பெட்ரோல், டீசல்,  கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

ஆர்ப்பா ட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல்,கேஸ் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிடு, வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும், 

ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்து, வேலை வாய்ப்யை பெருக்கிடு நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டுவர வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோ ஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News