உள்ளூர் செய்திகள்
வழக்கு

கூடுதல் வரதட்சனை கேட்டு இளம் பெண் சித்ரவதை

Published On 2022-05-27 09:16 GMT   |   Update On 2022-05-27 09:16 GMT
கூடுதல் வரதட்சனை கேட்டு இளம் பெண் சித்திரவதை செய்யப்படுவதாக 3 பேர் மீது வாக்கு பதிவு
மதுரை
மதுரை சம்மட்டிபுரம், பாண்டி கோவில் தெருவை சேர்ந்த பத்மபிரியா (வயது 31). என்பவர் முதல் திருமணத்தை மறைத்து கணவர் வரதட்சணை கொடுமை செய்து வருகிறார் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 

அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பத்மபிரியா, “எனக்கும் சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த டேவிட் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 8 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகளை வரதட்சணையாக கொடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து நான் கணவருடன் ஆவடி அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வந்தேன். இந்த நிலையில் எனது கணவர்,  முதல் திருமணத்தை மறைத்து கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்துகிறார். இதற்கு அவரது பெற்்றோரும் உடந்தையாக உள்ளனர் என தெரிவித்தார். இதன் அடிப்படையில் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட், பெற்றோர் இன்சன்ட்ராஜ், அருள்ஜோதி ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News