உள்ளூர் செய்திகள்
சாம்பவர்வடகரையில் ஓடையில் மணல் திருடியவர் கைது
சாம்பவர்வடகரை அருகே ஓடையில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை வாலன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 37). இவர் சுப்பையாபுரம் அருகே உள்ள புழுவாய் பொட்டல்குளம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
மணல் திருட்டுக்கு பயன்படுத்திய சிறிய வகை டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை வாலன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 37). இவர் சுப்பையாபுரம் அருகே உள்ள புழுவாய் பொட்டல்குளம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
மணல் திருட்டுக்கு பயன்படுத்திய சிறிய வகை டிராக்டரை பறிமுதல் செய்தனர்.