உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

மாமல்லபுரத்தில் வாலிபர் திடீர் உயிரிழப்பு

Published On 2022-05-27 08:54 GMT   |   Update On 2022-05-27 08:54 GMT
மாமல்லபுரத்தில் வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

போரூரில் வசித்து வந்தவர் தினேஷ் (வயது33). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் மாமல்லபுரம் கடற்கரை விடுதி ஒன்றில் நடந்த நண்பரின் குடும்ப விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார்.

பின்னர் அருகில் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த கடற்கரை விடுதிக்கு சென்றார். அங்கு தினேஷ், கடற்கரையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே தினேஷ் உயிரிழந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News