உள்ளூர் செய்திகள்
அவதி

மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதி

Published On 2022-05-27 08:25 GMT   |   Update On 2022-05-27 08:25 GMT
இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பால் கிராம மக்கள் அவதிபட்டனர்.
மேலூர்

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. 

கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அய்யாபட்டி, மங்க ளாம்பட்டி, கருங்காலக்குடி, உடப்பன்பட்டி, ஓட்டக்கோவில்பட்டி, காரியேந்தல்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக மாலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் காலை வரையிலும் வரவில்லை. 

இதனால் மின்சாரவசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமம் அடைந்தனர்.தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். 

மின்சார வசதி இல்லாமல் கைப்பேசிகள் மற்றும் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. சில நாட்களாகவே கொட்டாம்பட்டி சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்சார துண்டிப்பு பகலில் மட்டுமின்றி இரவிலும் அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். 

விவசாய பகுதிகளில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியாமலும், குடிநீர் பிரச்சினைகளும் இதனால் ஏற்படுவதால், பராமரிப்பு பணிகளை மின்வாரிய பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News