உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட வாலிபர்கள்

வத்தலக்குண்டு அருகே கட்டையால் தாக்கி மிரட்டிய 2 பேர் கைது

Published On 2022-05-27 05:47 GMT   |   Update On 2022-05-27 05:47 GMT
வத்தலக்குண்டு அருகே கட்டையால் தாக்கி மிரட்டிய 2 பேர்களை போலீசார் கைது செய்தனர்
வத்தலக்குண்டு:

பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ேகாபாலகிருஷ்ணன்(21). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அருண்பாண்டி(22) என்பவருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தேர் இழுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் ேமாட்டார் சைக்கிளில் தனியாக வந்ததை அறிந்து அருண்பாண்டி, வேணுகோபால், பிரபாகரன், அழகுராஜா ஆகியோர் வழிமறித்து உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா வழக்குபதிவு செய்து அருண்பாண்டி மற்றும் பிரபாகரனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News