உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காவலாளி மயங்கி விழுந்து சாவு

Published On 2022-05-27 05:26 GMT   |   Update On 2022-05-27 05:43 GMT
சேதராப்பட்டில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:

வானூர் அருகே பேராவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது46). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சிவக்குமார் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  வழக்கம் போல் சிவக்குமார் காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிவக்குமாரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவக்குமாரின் சகோதரர் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News