உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெண் மீது தாக்குதல்

Published On 2022-05-27 05:23 GMT   |   Update On 2022-05-27 05:23 GMT
சகோதரியுடன் அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை தேங்காய்திட்டு பள்ளிகூட வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி எழிலரசி(வயது42).  எழிலரசியின் வீட்டுக்கு அவரது சகோதரி தனலட்சுமி வீட்டு விசேஷத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார்.

பின்னர் தனலட்சுமியும் எழிலரசியும் அருகில் உள்ள தங்களது சகோதரர் முருகையன் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு சகோதரர் சிவபிரகாசம், அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் தனலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனை எழிலரசி தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சிவபிரகாசம் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் இவர்களது மகள் மஞ்சு, அவரது கணவர் சுசீந்திரன் மற்றும் உறவினர்கள் வேம்பு, கன்னியப்பன் ஆகியோர் சேர்ந்து சென்ட்ரீங் பலகையால் எழிலரசியை தாக்கினர்.

மேலும் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த எழிலரசி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News