உள்ளூர் செய்திகள்
நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு
நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை பிளஸ்-2 பொதுத்–தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 23-ந்தேதி (திங்கட்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக நிர்வாகம் மற்றும் செயலக பதவி உள்ளிட்ட 11 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றன.
இதனால் 12-ம் வகுப்பு ெதாழில் பாட பிரிவை தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் அன்றைய தேதியில் தேர்வு முடிவடைந்து விட்டது . இதனால் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 23-ந்தேதி அன்று மகிழ்ச்சியுடன் ஒருவருக்ெகாருவர் வாழ்த்து ெதரிவித்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பிளஸ்-2 தொழில் பாட பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுடன் பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது.