உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வால்பாறையில் பிரபல கஞ்சா வியாபாரி உள்பட 2 பேர் கைது

Published On 2022-05-26 09:53 GMT   |   Update On 2022-05-26 09:53 GMT
வால்பாறை காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
ஆனைமலை:

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து வால்பாறை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3Ñ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை பதுக்கி வைத்து இருந்த வீட்டில் உரிமையாளருமான தாஸ் என்கிற மரியதாஸ் (வயது 50) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது வால்பாறை போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்பட 22 வழக்குகள் உள்ளது. பின்னர் மரியதாஸை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் அம்ப ராம்பாளையம் பஸ் நிலை யம் வழியாக ரோந்து சென்ற னர். அப்போது அங்கு சந்தேப்படும் படி நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரை சோதனை செய்தனர்.அப்போது அவர் தனது கைப்பையில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. 

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அம்பராம்பாளையம் அருகே உள்ள புலியன்தோப்பை சேர்ந்த சன்னி (48) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ. 3,250 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சன்னியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அைடத்தனர்.  

Tags:    

Similar News