உள்ளூர் செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி குடிசை மாற்று வாரியம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாவாணர் நகர் கிளை சார்பில் குடிசை மாற்று வாரியம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சிந்தாமணி, உழவர்கரை தொகுதி செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் நளவேந்தன் தலைமை வகித்தனர். ஞானவேல், அஞ்சலிதேவி, பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, தொகுதிக்குழு உறுப்பினர் தேவசகாயம் கண்டன உரையாற்றினர்.
பாவாணர் நகரில் 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அடிப்படை வசதியற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். குடிசைமாற்றுவாரிய இடத்தில் குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் விஜயலட்சுமி, திருமுருகன், வீரப்பன், காமாட்சி, மாரியப்பன், கிருஷ்ணவேணி, கருப்பாயியம்மாள், பஞ்சநாதன், நீலாவதி, நாகராஜ், சுசிலா, ஆனந்தி, சாந்தி, மகாராணி, வள்ளியம்மை, ஜெயலட்சுமி, தனலட்சுமி, கணேசன், அஞ்சலை, தாமோதரன், பூங்காவனம், காசியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.