உள்ளூர் செய்திகள்
திமுக

மேல்சபை எம்.பி. தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல்

Published On 2022-05-26 07:55 GMT   |   Update On 2022-05-26 07:55 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

சென்னை:

மேல்சபை எம்.பி. தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேல்சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் நாளை வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

Tags:    

Similar News