உள்ளூர் செய்திகள்
பெண் சாவு

பெண் மர்மச்சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

Published On 2022-05-25 09:12 GMT   |   Update On 2022-05-25 09:12 GMT
பெண் மர்மச்சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசல் புகார் அளித்தார்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி நீதிதேவன் தெருவைச் சோ்ந்தவா் உமா பாலன். இவரது மனைவி தனபாக்கியம் (வயது40). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். வெளிநாடு சென்றிருந்த உமாபாலன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊா் திரும்பியுள்ளாா்.

இந்த நிலையில், அவரது மனைவி தனபாக்கியம் நேற்று காலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். உடனே அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தனபாக்கியத்தை கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். 

இந்தநிலையில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காா்மேகம் போலீசில் புகாா் அளித்தாா். இதையடுத்து தனபாக்கியம் சடலத்தை கைப்பற்றிய உச்சிப்புளி போலீசார் பிரேதப் பரிசோ தனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாக்கியம் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News