உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வண்டல் மண் எடுப்பதற்கான சிக்கல்களை தீர்க்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-05-25 12:45 IST   |   Update On 2022-05-25 12:45:00 IST
கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

திருப்பூர்:

நீர்நிலைகள் விவசாய நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மண் மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கான விதிமுறைகளில் தற்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விவசாயப் பயன்பாட்டுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலதாமதம் அதன்படி வண்டல் மண் எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளது.

அதன்படி ஒரு வருவாய் கிராமம் அல்லது அதை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு மட்டுமே மண் எடுத்துச் செல்லலாம். இதனால் நீர் நிலைகள் இல்லாத பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே கடந்த காலங்களைப் போல அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். மேலும் தற்போது மண் அள்ள மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டியதுள்ளது.

2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல தாசில்தார் மட்டத்தில் அனுமதி அளித்தால் காலதாமதம் மற்றும் அலைச்சல் இல்லாமல் விவசாயிகள் பலனடைய முடியும். அத்துடன் விவசாயிகள் நலன் கருதி, மண் அள்ளுவதற்கு விவசாயிகளே ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News