உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவையொட்டி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்

பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா கொண்டாட்டம்

Published On 2022-05-24 12:28 GMT   |   Update On 2022-05-24 12:28 GMT
திருப்பத்தூர் பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா கொண்டாட்டப்பட்டது.
திருப்பத்தூர்

பேரரசர்  பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2002-ம் ஆண்டில் இருந்து சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

முத்தரையர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக வந்து திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய விழா முத்தரையர் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. 

இதில் திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர், காரையூர், ரணசிங்கபுரம், அய்யாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

அதனைத்தொடர்ந்து கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் சதய விழாவை கொண்டாடினர். 

இதில் முத்தரையர் கூட்டமைப்பின் இளைஞர்கள், மகளிர் அணி தலைவி அய்யாபட்டி லதா, ஆத்திக்காடு மாரிமுத்து, காரையூர் தவசு, திருக்கோஷ்டியூர் வட்டார தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மேலயான்பட்டி சக்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News