உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு

Published On 2022-05-24 16:24 IST   |   Update On 2022-05-24 16:24:00 IST
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கண்ணமங்கல்:

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 18). இவர் நண்பர்களுடன் சேர்ந்து அம்மாபாளையம் பெரிய ஏரிக்கு நேற்று மாலை சென்றார். 

அப்போது ஏரியில் குளிப்பதற்காக இறங்கி உள்ளார். இதில் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் தேடிப்பார்த்தும் அஜித் குமார் கிடைக்காததால் ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய தேடினர். சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பின்பு அஜித் குமாரை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News