உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்படுமா? விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-05-24 07:33 GMT   |   Update On 2022-05-24 07:33 GMT
முகாம் குறித்த அறிவிப்பு, விளையாட்டுத்துறை தரப்பில் இருந்து வந்தவுடன் தெரிவிக்கப்படும்.

உடுமலை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனிநபர், குழு விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறியவும், விளையாட்டுக்களை கற்றுத்தரவும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துகிறது.

இம்முகாமில் தடகளம், கால்பந்து, டேக்வாண்டோ, பேட்மின்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு பயிற்சியாளர் வாயிலாக பயிற்சி வழங்கப்படும். காலை, 6 மணிமுதல்9 மணி வரை, மாலை 3மணி முதல் 6மணி வரை நடக்கும் பயிற்சி முகாம், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை.

கொரோனா பாதிப்பு பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பூஜ்ஜியமாகியுள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையும், மாவட்ட விளையாட்டுத்துறையும் கோடை விடுமுறை விட்டு ஒரு வாரமாகியும் சத்தமில்லாமல் உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் இதுவரை வழங்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபாலிடம் கேட்ட போது,கோடைகால பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பு, விளையாட்டுத்துறை தரப்பில் இருந்து வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News