உள்ளூர் செய்திகள்
மரணம்

திருவள்ளூர் அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி

Published On 2022-05-24 06:36 GMT   |   Update On 2022-05-24 06:36 GMT
திருவள்ளூர் அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சாருகேஷ் (வயது17). பிளஸ்-1 படித்து வந்தார். இவர் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பெற்றோருடன் இருந்தார்.

அங்கு சாருகேஷ் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணற்றில் விழுந்த அவர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

அருகில் இருந்தவர்கள் சாருகேசை மீட்டு சிகிச்சைக்காக மப்பேட்டில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சாருகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மப்பேடு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ னைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News