உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-05-23 10:15 GMT   |   Update On 2022-05-23 10:15 GMT
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
 
கோவை செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. வெல்டர்.  இவரது மனைவி ஆர்த்தி (வயது 30). சம்பவத்தன்று  கிருஷ்ணமூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். 

இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி ஆட்டு இறைச்சி வாங்குவதற்காக வெளியே சென்றார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்து காணப்பட்ட ஆர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இறைச்சி வாங்கி விட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தியின் உடலைல மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News