உள்ளூர் செய்திகள்
தைல மரக்காட்டில் எரிந்த தீயை அப்பகுதி இைளஞர்கள் செடிகளை கொண்டு அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது எடுத்த பட

தைலமரக்காட்டில் திடீரென பயங்கர தீ விபத்து

Published On 2022-05-23 08:37 GMT   |   Update On 2022-05-23 08:37 GMT
பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 17ம் வீதி பின்புறம் உள்ள தைலமரக்காட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயானது அதி–வேகமாக பரவ தொடங்கியது. 

இதை பார்த்த அருகே இருந்தவர்கள் புதுக்கோட்டை தீயணைப்புதுறையினருக்கு தகவல்தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் காட்டுப்பகுதிக்குள் செல்ல பாதை இல்லாததால்தீயணைப்புத்துறை வீரர்கள் பொது–மக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் இணைந்து மரக் கிளைகளை உடைத்து பத்தி எரியும் தீயைமூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுப்படுத்தினர். 


இந்த தீ விபத்தால் காமராஜபுரத்தின் ஒரு பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,இந்த தீ விபத்து தொடர்கதையாக உள்ள நிலையில் இதைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, தீ விபத்து ஏற்படும் பொழுது ஒவ்வொரு முறையும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

 இந்த காட்டுப் பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும்காட்டில் பற்றி எரியும் தீ குடியிருப்புகளில் பரவும்அபாயம் உள்ளது. 

அவ்வப்போது தைல மர காட்டுப் பகுதியில் ஏற்படும் தீவிபத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்இந்த தைல மரத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் தமிழக அரசு தைல மரக் காட்டை அப்புற–ப்படுத்தி பல்லுயிர் காடுகளை வளர்க்க நடவடி–க்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News