உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு அங்காடியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராம கூட்டுறவு அங்காடியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களின் தரம் குறித்தும், பொருட்கள் இருப்பு குறித்த விவரத்தினையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.