உள்ளூர் செய்திகள்
கைதான பக்கிரிசாமி.

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Published On 2022-05-22 10:43 GMT   |   Update On 2022-05-22 10:43 GMT
நாகை மாவட்டத்திர் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் பல்வேறு சாராய வழக்குகளில் தொடர்புடைய வேளாங்கண்ணியை சேர்ந்த சேவல் என்கிற பக்கிரிசாமியை (வயது 40) மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

அதன்படி பக்கிரிசாமியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News