உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு நிலையம் கட்டும் இடம் ஆய்வு
தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம் கட்டும் இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு காவல் சரக பகுதிகளில் காவல் துறை இயக்குனரும்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு.
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் மற்றும் அலுவலர்கள் தங்கும் விடுதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகளை காவல்துறை இயக்குனரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமாண ஏ.கே. விஸ்வநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல், தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைஞாயிறு தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர், தீ தடுப்பு அலுவலர் பாலு மற்றும் தீயணைப்பு துறைபணியாளர்கள் உடனிருந்தனர்.