உள்ளூர் செய்திகள்
விழாவில் பெற்றோர் தங்களது குழந்தைகளை வைத்து தூக்க நேர்ச்சை வழிபாடு

செடிலில் குழந்தைகளை வைத்து தூக்க நேர்ச்சை வழிபாடு

Published On 2022-05-21 16:01 IST   |   Update On 2022-05-21 16:01:00 IST
திருப்பூண்டி அருகே வைகாசி திருவிழாவில் செடிலில் குழந்தைகளை வைத்து தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருப்–பூண்டியை அடுத்த சோழ வித்தியாபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்–கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து காவடி மற்றும் பால்காவடி, பாடைகாவடி எடுத்து வந்தும், மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
 
இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம், மே.21-
நாகை மாவட்டம் திருப்–பூண்டியை அடுத்த சோழ வித்தியாபுரத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்–கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து காவடி மற்றும் பால்காவடி, பாடைகாவடி எடுத்து வந்தும், மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 
இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News