உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே சமையலறையில் கை கழுவும் போது தவறி விழுந்தவர் சாவு
ஜோலார்பேட்டை சமையலறையில் கை கழுவும் போது தவறி விழுந்து இறந்தார்.
ஜோலார்பேட்டை :
கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை அக்பர் ஷரிப் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் வேல்பாண்டி (வயது 50). இவரது மகள் வித்யா மற்றும் உறவினர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அருகே எழில் நகர் பகுதி எம்ஜிஆர் தெருவில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 17-ந் தேதி வந்தனர்.
அப்போது அனைவரும் உறவினர் வீட்டிலேயே தங்கினர்.சம்பவத்தன்று இரவு வேல்பாண்டி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சமையல் அறைக்கு சென்ற அவர் கை கழுவும் போது தடுமாறி கீழே விழுந்து மயங்கி கிடந்தார்.
இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து மயங்கி கிடந்த வரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநில கோலாரில் உள்ள கோலார் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகள் வித்யா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.