உள்ளூர் செய்திகள்
சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு
கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு விழாவிற்கு காரைக்கால் சென்றார். பின்னர் புதுச்சேரி திரும்பினார். வரும் வழியில் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு திடீரென சென்றார்.
அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்து வரவேற்றனர். சாய்பாபாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.