உள்ளூர் செய்திகள்
வாலிபர் கைது

கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

Published On 2022-05-19 10:52 GMT   |   Update On 2022-05-19 10:52 GMT
மதுரை அருகே ஏற்பட்ட தகராறில் கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை

மதுரை செல்லூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). இவர் நேற்று கே.வி.சாலை மட்டன் கடை முன்பு காரை நிறுத்தினார். 

அப்போது அவருக்கும் கீழவைத்தியநாதபுரம் ராஜா (26) மற்றும் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, கார் கண்ணாடியை உடைத்து மாணிக்கம் மகனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக மாணிக்கம் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து, தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News