உள்ளூர் செய்திகள்
மழை

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

Published On 2022-05-19 09:41 GMT   |   Update On 2022-05-19 10:51 GMT
வருகிற 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழையும், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News