உள்ளூர் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கொட்டம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் கருப்பசாமி (வயது 43).
இவர் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.