உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாவில் பெண்களிடம் நகை திருட்டு
கோவில் திருவிழாவில் பெண்களிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீத்தம்பட்டியை சேர்ந்த பழனிமுத்து (வயது 53), கோட்டையூர் பொன்னம்மாள் (60), ராயவரம் மீனாள் (40). இவர்கள் மூன்று பேரும் அரிமளம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர்.
அதில் ராயவரம் மந்தையம்மன் கோவில் தேர்த்திருவிழாவை காண்பதற்காக சென்றோம். அப்போது எங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி (மொத்தம் 9 பவுன்) காணவில்லை என்று தெரிவித்திருந்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.