உள்ளூர் செய்திகள்
தொடர் மழையால் செண்பகத்தோப்பு அணை நிரம்பியது.
கண்ணமங்கலம்:
கடந்த சில தினங்களில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக படவேடு செண்பகத்தோப்பு அணையின் கொள்ளளவானது தற்போது 54 அடியை எட்டி உள்ளது.
எனவே இன்று காலை அணையிலிருந்து சுமார் 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமண்டல நதியின் ஓரமாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்கும்படியும் பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது என வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.