உள்ளூர் செய்திகள்
குன்னத்துர் கீழ்நகர் குண்டம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பி தண்ணீர் வெளியேறிய காட்சி.

தொடர் மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளம்

Published On 2022-05-18 15:22 IST   |   Update On 2022-05-18 15:22:00 IST
தொடர் மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சேவூர் முள்ளிபட்டு இரும்பேடு கண்ணமங்கலம் காட்டுகாநல்லூர் படவேடு உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பலத்த கனமழை பெய்ந்து வருகிறது.

மேலும் ஜவ்வாதுமலை அடி வாரத்தில் நேற்று அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அமிர்தி, காட்டாறு, காட்டுகாநல்லூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி கால்வாயில் மழை வெள்ளம் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
குன்னத்துர் கீழ்நகர் குண்டம் தடுப்பணையில் மழைநீர் நிரம்பியதால் ஆரணியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றில் மழை வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளன.

கோடை காலத்தில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News