உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்கூட்டம்

Published On 2022-05-18 14:58 IST   |   Update On 2022-05-18 14:58:00 IST
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (19-ந் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. 

இதில் அறந்தாங்கி, மண்மேல்குடி மற்றும் ஆவுடையார் கோவில் வட்டங்களுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Similar News