உள்ளூர் செய்திகள்
விஜயபாஸ்கர் திறந்து வைத்த போது எடுத்தப்படம்.

கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு

Published On 2022-05-17 15:27 IST   |   Update On 2022-05-17 15:27:00 IST
அ.தி.மு.க சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை:



புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

விழாவில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணி, நீர் மோர் ஆகியவற்றை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்தாமலை ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News