உள்ளூர் செய்திகள்
லாரிகளை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது
லாரிகளை அடித்து நொறுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சீகம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32). இவர் தனது லாரியை சந்தையில் நிறுத்திவைத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் நாகராஜனுடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இச்சபம்வம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் டவுன்போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்(21), மேலஐந்தாம் வீதியை சேர்ந்த நவீன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.