உள்ளூர் செய்திகள்
டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
சேத்துப்பட்டு அடுத்த தேசூரில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய டெங்கு தடுப்பு தினமும் தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெருங்கடபுத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்கள், வீட்டைச்சுற்றி குப்பை கூளங்கள் போடுவதை அப்புறப்படுத்துவது, தேவையற்ற டயர்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடு, தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் கொசுப்புழு வளர்ச்சியை தடுப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் காய்ச்சல் கண்டவுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வப்போது தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமிக்க வேண்டும், மூடி வைத்தல் அவசியம், போன்றவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் நிலவேம்பு குடிநீர் பருகுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி.ஷா, சுகாதார ஆய்வாளர் கணேஷ்குமார், ராஜேஷ் கண்ணா, மருத்துவ பணியாளர்கள், மஸ்தூர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.