உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகர நல அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகர நல அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.