உள்ளூர் செய்திகள்
மாணவி திருமணம்

பிளஸ்-1 மாணவி திருமணம்

Published On 2022-05-16 11:58 GMT   |   Update On 2022-05-16 11:58 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மாத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் கார்த்திக். ஜவுளி வியாபாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விருதுநகரில் பிளஸ்-1 படித்த உறவுக்கார சிறுமியை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் எரிச்சநத்தம் பகுதியில் குடியிருந்து வந்ததாக தெரிகிறது.

 இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். அவர் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றதாக தெரிகிறது. 17 வயது பெண் குழந்தை பெற்றதால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News