உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பழுதான கார் டயர் மாற்றும் போது வேன் மோதி முதியவர் பலி

Published On 2022-05-16 15:08 IST   |   Update On 2022-05-16 15:08:00 IST
பெருந்துறை அருகே பழுதான கார் டயர் மாற்றும் போது வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே பழுதான கார் டயர் மாற்றும் போது வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் தனது உறவினர் ஒருவரது திருமணத்துக்கு குடும்பத்துடன் கோவா சென்றார்.

அங்கு இருந்து மீண்டும் அவர் தனது குடும்பத்துடன் காரில் கோவை  வந்து கொண்டு இருந்தார். அவர்கள் பெருந்துறையை அடுத்துள்ள பெத்தா ம்பாளையம் ரோடு பை-பாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரின் பின்புற டயர் பஞ்சர் ஆனது. 
இதனை சரிசெய்ய ரமேஷ் மற்றும் அவரது மகன் ஜோக் ரிசர்டு (23) உறவினர் ஜோஸ் (21) ஆகியோர் கீழே இறங்கி வண்டியை சுற்றி கற்களை வைத்து டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிடோர் வேன்  ஜோக் ரிச்சர்ட் மற்றும் ஜோஸ் ஆகியோர்  மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஜோக் ரிச்சர்ட் மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும்  மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோக் ரிச்சர்ட் பரிதாபமாக இறந்தார். 
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News