உள்ளூர் செய்திகள்
காம்பட்டு கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-05-16 09:37 GMT   |   Update On 2022-05-16 09:37 GMT
கலசப்பாக்கம் அடுத்த காம்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அருகில் உள்ள காம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு அதன் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. 

விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து மூன்று நாள் யாகசாலை பூஜையும் இதனைத் தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

யாகசாலையில் வைக்கப்பட்ட கலசபுனித நீரை எடுத்து அம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சாமி வீதி உலா வாணவேடிக்கை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News