உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-05-16 07:20 GMT   |   Update On 2022-05-16 07:20 GMT
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:

திருச்சி காமராஜ் நகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராமராஜன் (44). இவரது மகன் தமிழ்செல்வன் (21). 

இவர் கடந்த 2 மாதமாக ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அருகே உள்ள பெரிய வெத்தி பாளையத்தில் தனது அத்தை ஜெயந்தினி  வீட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து  செல்போனில் பேசிக் கொண்டு வெளியே சென்றார். 

மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  

இதையடுத்து ஜெயந்தினி அக்கம் பக்கம் தேடி பார்த்தார்.

அப்போது வீட்டில் அருகே உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்று மேட்டில் தமிழ் செல்வன் சட்டை, செல்போனும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தேடினர்.

அப்போது  தமிழ் செல்வன் கிணற்றில் பிணமாக கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது  உடலை மீட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் போலீசார் தமிழ்செல்வன் உடலைகைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News