உள்ளூர் செய்திகள்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் குளம்போல் தேங்கிய மழை வெள்ளம்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2022-05-16 12:28 IST   |   Update On 2022-05-16 12:28:00 IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நாட்டறம்பள்ளி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேகம் மந்தமாக காணப்படுகிறது. நேற்று பகலில் வேலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது. 99.9 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில் மாலை திடீரென மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு 7 மணிமுதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வேலூர், குடியாத்தம், திருவலம் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதிகபட்சமாக மாவட்டத்தில் மேல் ஆலத்தூரில் 39.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மோர்தனா அணை அடுத்த ஆந்திரா வனப்பகுதியில், நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. இன்று அதிகாலை முதல் தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி வழிந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நாட்டறம்பள்ளி பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர், ஆம்பூர், ஆலங்காயம் வாணியம்பாடி பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக நாட்றம்பள்ளியில் 84.2 மீட்டர் மழை பதிவானது.

ஏலகிரி மலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பகுதியில் பலத்த மழை பெய்தது. சோளிங்கர், காவேரிபாக்கம், அரக்கோணம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை காரணமாக குளிர்ச்சியான தட்பவெப்பநிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News