உள்ளூர் செய்திகள்
வாலிபருடன் பழகி கர்ப்பிணியான பிளஸ் 2 மாணவி

ஆன்லைன் வகுப்புக்கு வாங்கி கொடுத்த செல்போனால் வாலிபருடன் பழகி கர்ப்பிணியான பிளஸ் 2 மாணவி

Published On 2022-05-16 05:26 GMT   |   Update On 2022-05-16 05:26 GMT
விருதுநகரில் ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்தனர். அவரது தாய் வேலைக்கு சென்று விடுவதால் மகளை தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.

அப்போது மாணவியை, விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான ரமேஷ் (19) என்பவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். ரமேஷ் மாணவியின் ‌செல்போன் எண்ணை வாங்கி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகவும், மேலும் இரண்டு முறை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அவரது தாய் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மாணவியிடம், அவரது தாய் கேட்டபோது, உறவினர் ரமேஷ் திருமண ஆசை காட்டி தன்னிடம் நெருக்கமாக இருந்ததாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இது பற்றி விருதுநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ரமேஷ் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .

மாணவியின் படிப்புக்காக வாங்கி கொடுத்த செல்போன், அவரது வாழ்க்கையை திசை மாற்றி விட்டது என்பதை அறிந்து அவரது பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News